இலங்கை மின்சார சபை பாரிய நட்டத்தை நோக்கி

(UDHAYAM, COLOMBO) – வறட்சியான காலநிலை தொடர்ந்து நிலவும் பட்சத்தில் இலங்கை மின்சார சபை பாரிய நட்டத்தை எதிர்கொள்ள வேண்டி ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சக்திவள அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய இதனைத் தெரிவித்துள்ளார்.

தற்போது நிலவும் வறட்சியான காலநிலையால் நீர்மின்னுற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலைமை ஜுன் மாதம் 30ம் திகதி வரையில் தொடரும் பட்சத்தில், 51 பில்லியன் ரூபாய் மேலதிக செலவினை மின்சார சபை தாங்கிக் கொள்ள நேரிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

COMMENTS

Wordpress (0)
Disqus ( )