அணி குறித்து நம்பிக்கை வெளியிட்டுள்ள ரங்கன ஹேரத்!!

(UDHAYAM, COLOMBO) – பங்களாதேஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை வெற்றிகொள்ள முடியும் என்று, இந்த டெஸ்ட் தொடருக்காக இலங்கை அணியின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள ரங்கன ஹேரத் தெரிவித்துள்ளார்.

இந்த மாதம் ஆரம்பமாகும் தொடருக்கான இலங்கை குழாம் நேற்று அறிவிக்கப்பட்டது.

இதன்படி ரங்கன ஹேரத் தலைமையிலான இலங்கை குழாமில் Dinesh Chandimal (wk), Dimuth Karunaratne, Niroshan Dickwella, Upul Tharanga, Dhananjaya de Silva, Kusal Mendis, Asela Gunaratne, Suranga Lakmal, Lahiru Kumara, Nuwan Pradeep, Vikum Sanjaya, Dilruwan Perera, Lakshan Sandakan, Malinda Pushpakumara ஆகியோர் இணைக்கப்பட்டுள்ளனர்.

இந்த அணி குறித்து நம்பிக்கை வெளியிட்ட ரங்கன ஹேரத், இளம் மற்றும் அனுபவ வீரர்களைக் கொண்டதாக அணி இருக்கின்ற நிலையில், இந்த தொடரை வெற்றிக் கொள்ள முடியும் என்ற நம்பிக்கை இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

COMMENTS

Wordpress (0)
Disqus ( )