புதிய கூட்டணியுடன் இணைய தயார் – சஜித்

புதிய கூட்டணியுடன் இணைய தயார் – சஜித்

(UTVNEWS | POLONNARUWA) –பொது மக்களுக்கு நிவாரணம் பெற்றுக் கொடுக்கும் செயற்திட்டங்களில் அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட தயாராக உள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

பொலன்னறுவையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இதனை தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,“மக்கள் எதிர்ப்பார்த்த நாடு இன்று உருவாக்கப்படவில்லை.
விவசாய மக்கள் இலவச உரத்தை எதிர்பார்த்தனர். இன்று பணத்திற்கும் உரம் இல்லை.வேறொரு ஜனாதிபதியுடன் நாட்டுக்காக உழைக்க எம்மால் முடியும். நாட்டுக்கு நன்மை பயக்கும் திட்டங்களுக்கு மட்டுமே இணைந்து செயற்படுவோம். சஜித் பிரேமதாச புதிய கூட்டணியுடன் இணைந்து பணியாற்றத் தயாராக உள்ளார்” என்றார்.

COMMENTS

Wordpress (0)
Disqus ( )