கொரோனா வைரஸ் – பொதுமக்களுக்கு விடுத்துள்ள கோரிக்கை
(UTV|கொழும்பு) – கொரோனா வைரஸ் தொடர்பில் சமூக வலைத்தளங்களில் மேற்கொள்ளப்படும் உண்மைக்கு புறம்பான பிரச்சாரங்களுக்கு ஏமாற வேண்டாம் என அரசாங்க தகவல் திணைக்களம் பொதுமக்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
வைரஸ் தொற்றுக்கு உள்ளான நபர் அல்லது இடம் ஒன்று இனங்காணப்பட்டால் அது தொடர்பில் அரச சுகாதார அதிகாரிகளால் ஊடகங்கள் வாயிலாக பொதுமக்களுக்கு அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிக்கை ஒன்றை வௌியிட்டு அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.