மசூதியில் இடம்பெற்ற கத்தி குத்து சம்பவத்தின் சந்தேக நபர் கைது

மசூதியில் இடம்பெற்ற கத்தி குத்து சம்பவத்தின் சந்தேக நபர் கைது

(UTV|இலண்டன்) – மத்திய இலண்டன் ரீஜண்ட் பார்க் அருகிலுள்ள உள்ள மசூதியில் இடம்பெற்ற கத்தி குத்து சம்பவத்தினை தொடர்ந்து சந்தேக நபர் ஒருவர் அந்நாட்டு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

29 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதோடு , குறித்த சம்பவத்தினை பொலிஸார் பயங்கரவாத செயலாக இருக்க வாய்ப்பில்லை என சுட்டிக்காட்டியுள்ளனர்.

சம்பவத்தில் எவ்வித உயிரிழப்புகளும் ஏற்படவில்லை , ஆனாலும் 70 வயதுடைய நபர் ஒருவர் காயங்களுக்குள்ளானதாக அந்நாட்டு செய்திகள் தெரிவித்துள்ளதோடு, அவர் உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அதேவேளை காயமடைந்த நபர் மசூதியில் இடம்பெறும் பிரார்த்தனைகளுக்கு அழைப்பு விடுபவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

COMMENTS

Wordpress (0)
Disqus ( )