கொழும்பில் இன்று கொரோனா ஒத்திகை

கொழும்பில் இன்று கொரோனா ஒத்திகை

(UTV|கொழும்பு) – கொழும்பு துறைமுகத்தில் இலங்கை கடற்படை, சுவ சரிய அம்பியுலன்ஸ் சேவை, துறைமுக தீயணைப்பு படை, துறைமுக மருத்துவ அதிகாரிகள் மற்றும் தேசிய மருத்துவர்கள் ஆகிய குழுக்கள் இன்று(14) கொழும்பு துறைமுகத்தில் கொரோனா தொடர்பில் விசேட ஒத்திகை நிகழ்வொன்றை நடத்தியுள்ளனர்.

அதில் கொரோனா நோயாளி ஒருவர் கப்பலில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டு எவ்வாறு தனிமைப்படுத்தப்பபடுத்தப்படுவார், மருத்துவமனைக்கு எவ்வாறு கொண்டு செல்லப்படுவார் போன்ற ஒத்திகையுடன் கப்பல் தரித்து நிற்கும் துறைமுக வளாகத்தை எவ்வாறு சுத்தமாக வைத்துக் கொள்வது போன்ற முன் ஒத்திகை நிகழ்வுகளும் இடம்பெற்றன.

COMMENTS

Wordpress (0)
Disqus ( )