இந்தியாவில் லசித் மாலிங்கவிற்கு கிடைத்துள்ள கௌரவம் -[VIDEO]

(UDHAYAM, COLOMBO) – மும்பை இந்தியன்ஸ் அணியின் 10 அண்டு பூர்த்தியை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விஷேட நிகழ்வு அண்மையில் இடம்பெற்றிருந்தது.

இதில் அந்த அணியின் முன்னாள் மற்றும் தற்போதைய வீரர்கள் பலர் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது இந்தியன் பிரிமியர் லீக் தொடர் ஆரம்பத்தில் இருந்து மும்பை இந்தியன்ஸ் அணி சார்பில் விளையாடிய 3 வீரர்கள் கௌரவிக்கப்பட்டுள்ளனர்.

இதில் லசித் மாலிங்கவும் உள்ளடங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஏனைய இரு வீரர்கள் சச்சின் டெண்டுல்கார் மற்றும் ஹர்பஜன் சிங் ஆகும்.

[ot-video][/ot-video]

COMMENTS

Wordpress (0)
Disqus ( )