பட்டதாரிகளின் பயிற்சி நடவடிக்கைகள் இடைநிறுத்தம்

பட்டதாரிகளின் பயிற்சி நடவடிக்கைகள் இடைநிறுத்தம்

(UTV | கொழும்பு) –  அரச சேவையில் இணைத்துக் கொள்ளப்படவுள்ள பட்டதாரிகளுக்கான பயிற்சி நடவடிக்கைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

நாட்டில் நிலவும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக அரச ​சேவை மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது.

அரச சேவைகளுக்கான பயிற்சிகளில் 50000 பட்டதாரிகள் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.

எவ்வாறாயினும், இவர்களுக்கான 20,000 ரூபா மாதாந்த கொடுப்பனவை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சு தெரிவித்துள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

COMMENTS

Wordpress (0)
Disqus ( )