கலிபோர்னியாவில் காட்டுத்தீ – ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றம்

கலிபோர்னியாவில் காட்டுத்தீ – ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றம்

(UTV | அமெரிக்கா) –  அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள இரு பகுதிகளில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீயால் ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

அத்துடன், கலிபோர்னியா மாநிலத்தின் இர்வின் நகர பகுதியில் 12 ஆயிரத்து 600 ஏக்கர் காட்டுத்தீயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக கலிபோர்னியா தீயணைப்பு பிரிவு குறிப்பிட்டுள்ளது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 3 இலட்சத்து 50 வீடுகளுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக பசிபிக் எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.

தீயை அணைக்கும் பணியில் 750 தீயணைப்பு வீரர்களும், 14 ஹெலிகொப்டர்களும் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில் இரண்டு தீயணைப்பு வீரர்கள் மிக மோசமாக படுகாயமடைந்துள்ளனர்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

COMMENTS

Wordpress (0)
Disqus ( )