கொழும்பு வரும் மக்களுக்கான விசேட அறிவித்தல்
(UTV | கொழும்பு) – கொழும்பு நகரத்திற்கு வருவதை இயன்றளவு தவிர்க்குமாறு இராணுவத் தளபதி லெஃப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
மேல் மாகாணத்தில் அமுல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்குச் சட்டம் இன்று தளர்த்தப்பட்டுள்ள போதிலும் மாவட்டங்களுக்கு இடையிலான பயணங்களை தவிர்க்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.
மேல் மாகாணத்தில் நிலவும் கொரோனா அச்ச நிலமை தொடர்பில் செய்தியாளர்கள் மத்தியில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார். தொடர்ந்தும் பேசிய அவர்,
அத்தியாவசிய தேவைகளைத் தவிர ஏனைய விடயங்களுக்காக கொழும்பு நகரத்திற்கு வருகை தருவதை தவிர்த்துக் கொள்ளுங்கள்.