LPL தொடரிலிருந்து விலகியதற்கான காரணம்

LPL தொடரிலிருந்து விலகியதற்கான காரணம்

(UTV | கொழும்பு) –  லங்கா பிரீமியல் லீக் கிரிக்கெட் தொடரிலிருந்து இலங்கை இருபதுக்கு – 20 அணித்தலைவர் லசித் மாலிங்க விலகியதற்கான காரணத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

இலங்கை அணியில் புதிய வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்க வழி வகுக்கும் நோக்கத்துடன் தான், லங்கா பிரீமியர் லீக் தொடரிலிருந்து விலகியதாக லசித் மாலிங்க அறிவித்துள்ளார்.

லங்கா பிரீமியர் லீக் தொடரிலிருந்து விலகியதை பலர் விமர்சித்துள்ளனர்.

இந்நிலையில், விமர்சனங்களுக்கு பதிலளித்த லசித் மாலிங்க, தனக்கான நேரம் முடிவுக்கு வந்துவிட்டதாகவும், இலங்கை கிரிக்கெட் அணியில் இடம்பெறும் புதிய வீரர்களுக்கு உதவ தயாராகவுள்ளதாகவும் மலிங்க மேலும் குறிப்பிட்டுள்ளார்.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

COMMENTS

Wordpress (0)
Disqus ( )