சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட பகுதிகள்

சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட பகுதிகள்

(UTV | அம்பாறை ) – அம்பாறை மாவட்டங்களின் கடந்த 3 தினங்களாக பெய்த பலத்த மழை மக்களின் இயல்பு நிலை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதுடன், கடற்றொழில் நடவடிக்கையும் ஸ்தம்பித்துள்ளது.

பிரதான மின் கம்பிகளில் மரங்கள் முறிந்து விழுந்ததில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. தடைப்பட்ட மின் இணைப்பை மின்சார சபையினர் சீர் செய்தமை குறிப்பிடத்தக்கது.

இதேநேரம் அம்பாறை மாவட்டத்தில் தொடர்ந்தும் பலத்த மழை பெய்து வருவதுடன் வீதிகள் குடியிருப்புக்கள் என பல இடங்களும் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளமையும் இந்நிலை நீடித்தால் வெள்ள அனர்த்தம் ஏற்படும் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

COMMENTS

Wordpress (0)
Disqus ( )