முடக்க நிலை தளர்த்தப்படுவதில் கேள்விக்குறி

முடக்க நிலை தளர்த்தப்படுவதில் கேள்விக்குறி

(UTV | கொழும்பு) – நாட்டினை திறப்பதற்கான சூழல் ஓரளவு ஏற்பட்டுள்ளதாக பிரதி சுகாதார பணிப்பாளர் விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

அவர் இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்;

“.. நாட்டை ஒரே நேரத்தில் முழுமையாக திறக்க கூடாதென்பதே சுகாதார பிரிவினரின் கருத்தாக உள்ளது.

நாட்டை கட்டம் கட்டமாகவே திறக்க வேண்டும். அவ்வாறு கட்டம் கட்டமாக திறக்கும் போது ஏற்படும் சிக்கல்களை தீர்த்து முன்னோக்கி செல்வதற்கு வாய்ப்புகள் உள்ளது.

எனினும் ஒரே நேரத்தில் நாட்டை திறந்தால் அதன் மூலம் ஏற்படும் முடிவு ஆபத்தானதாக இருக்கும்..” என பிரதி சுகாதார பணிப்பாளர் ஹேமந்த ஹேரத் மேலும் தெரிவித்துள்ளார்.

COMMENTS

Wordpress (0)
Disqus ( )