உலக சந்தையில் இலங்கை தேயிலைக்கு கேள்வி

உலக சந்தையில் இலங்கை தேயிலைக்கு கேள்வி

(UTV | கொழும்பு) –  உலக சந்தையில் இலங்கை தேயிலைக்கு நிலவும் கேள்விக்கு பாரிய இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாகத் தேயிலை சபையின் முன்னாள் தலைவர் லுஸில் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.

நாட்டில் நிலவும் உரம் இன்மை காரணமாக உற்பத்தி வீழ்ச்சியடைந்துள்ளமையால், பாரிய தாக்கம் ஏற்படக்கூடும் என தெரிவித்துள்ளார்.

அவர் இது தொடர்புள்ள மேலும் தெரிவிக்கையில்,

அத்துடன் தேயிலை உற்பத்தியின்போது, கழிவுத் தேயிலையின் அளவு அதிகரிக்கும் நிலை உள்ளது. இவ்வுற்பத்திக்கு சிறந்த சேதனப் பசளைகளைப் பயன்படுத்துவது நன்மையாயினும், இரசாயன உரத்தின் மூலம் கிடைக்கும் நைட்ரஜன் அளவை வழங்க முடியாது.

அவ்வாறு சேதன பசளைகளைப் பயன்படுத்திச் சிறந்த பலனைப் பெறவேண்டும் எனில் டன் கணக்கில் பயன்படுத்த வேண்டும். அது சாத்தியமில்லை. அதே நேரம் உரமற்ற தேயிலை கடதாசி போன்று இருக்கும்.

இதனால் தேயிலையின் தரம் குறைவடையும். இதனால் கழிவு தேயிலையின் அளவு அதிகரிக்கும். உலகில் 30 சதவீதம் அளவு இலங்கையின் தேயிலையே அதிக விலை கிடைக்கும் தேயிலையாகும்.

இதனால் உலக அளவில் பாரிய சவால் ஏற்படும். எனவே, இதற்கு உடனடி தீர்வை வழக்கும் விதமாக நைட்ரஜனை விரைவாகப் பெற்றுக்கொடுக்க வேண்டும் எனத் தேயிலை சபையின் முன்னாள் தலைவர் லுஸில் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.

COMMENTS

Wordpress (0)
Disqus ( )