க.பொ.த (சா/த) குறித்த அறிவித்தல்

க.பொ.த (சா/த) குறித்த அறிவித்தல்

(UTV | கொழும்பு) – 2021 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்வதற்கான கால அவகாசம் பெப்ரவரி 3 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வதற்கான காலம் ஜனவரி 20ஆம் திகதியுடன் முடிவடைவதாக ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

விண்ணப்பதாரர்கள், திணைக்கள இணையத்தளத்தில் உரிய விண்ணப்பத்தை சமர்ப்பிக்க முடியும் என பரீட்சைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

COMMENTS

Wordpress (0)
Disqus ( )