வாடகைத் தாய் மூலம் பிரியங்கா சோப்ராவுக்கு குழந்தை

வாடகைத் தாய் மூலம் பிரியங்கா சோப்ராவுக்கு குழந்தை

(UTV |  சென்னை) – பாலிவுட் நடிகைகளில் ஹாலிவுட் வரை சென்று கலக்கும் நடிகைகளில் பிரியங்கா சோப்ராவும் ஒருவர். இவர் கடந்த 2018ம் ஆண்டு நிக் ஜோனஸ் என்ற பாடகரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

பின் அவருடன் வெளிநாட்டிலேயே செட்டில் ஆகிவிட்டார், அவ்வப்போது ஸ்பெஷல் தினங்களில் கணவருடன் எடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிவிட்ட வண்ணம் இருக்கிறார்.

கடந்த சில மாதங்களுக்கு முன் பிரியங்கா தனது கணவரை பிரிகிறார் என்ற செய்தி வைரலாக அவரது அம்மா அதனை மறுத்திருந்தார்.

இந்த நிலையில் நடிகை பிரியங்கா சோப்ரா தனக்கு குழந்தை பிறந்துள்ளதாக இன்ஸ்டாவில் செய்தி வெளியிட்டுள்ளார்.

வாடகைத் தாய் மூலம் தங்களுக்கு குழந்தை பிறந்துள்ளது என பிரியங்கா மற்றும் நிக் இருவரும் இன்ஸ்டாவில் கூறியுள்ளனர்.

 

View this post on Instagram

 

A post shared by Priyanka (@priyankachopra)

COMMENTS

Wordpress (0)
Disqus ( )