பிரதமர் இராஜினாமா கடிதத்தினை ஜனாதிபதியிடம் கையளித்தார்

பிரதமர் இராஜினாமா கடிதத்தினை ஜனாதிபதியிடம் கையளித்தார்

(UTV | கொழும்பு) – பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தனது இராஜினாமா கடிதத்தை சற்று முன்னர் ஜனாதிபதியிடம் கையளித்துள்ளதாக உத்தியோகபூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஸ்ரீ மஹா போதி மற்றும் ருவன்மாலிசேயாவை வழிபடுவதற்காக இன்று காலை கொழும்பு வந்த பிரதமர் தனது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதியிடம் கையளித்துள்ளதாக உத்தியோகபூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாளை அலரிமாளிகைக்கு விஜயம் செய்யவுள்ள கட்சி உறுப்பினர்கள் முன்னிலையில் பிரதமர் இதனை அறிவிக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை நாமல் ராஜபக்ச தனது டுவிட்டர் கணக்கில் ஒரு மணித்தியாலத்திற்கு முன்னர் பழைய காணொளி ஒன்றை பதிவிட்டுள்ளார்.

நாடாளுமன்றத்தில் மஹிந்த ராஜபக்ஷ ஆற்றிய உரை ஒன்று உள்ளது.

அதன் பிரதமர் கூறுகிறார், ‘இந்தப் பிரதமர் பதவி எனக்குப் பெரிய விஷயமல்ல! மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்தாலும் பிரதமராக இருந்தாலும் அல்லது வெறும் பாராளுமன்ற உறுப்பினராக இருந்தாலும் மஹிந்த ராஜபக்ஷவே.’

COMMENTS

Wordpress (0)
Disqus ( )