ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஏகமனதான தீர்மானம்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஏகமனதான தீர்மானம்

(UTV | கொழும்பு) – தற்போதைய அரசாங்கத்தில் அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ள கட்சி உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் கட்சியின் மத்திய குழு கூடி முடிவெடுக்கும் என அதன் சிரேஷ்ட உப தலைவர் பேராசிரியர் ரோஹன லக்ஷ்மன் பியதாச தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிமல் சிறிபால டி சில்வா மற்றும் மஹிந்த அமரவீர ஆகியோர் அமைச்சர்களாக பதவிப் பிரமாணம் செய்துகொண்டுள்ளனர்.

இது தொடர்பில் கட்சியின் சிரேஷ்ட உப தலைவர் பேராசிரியர் ரோஹன லக்ஷ்மன் பியதாச கருத்து வெளியிட்டார்.

“ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழு கூடி, மத்திய குழு உறுப்பினர்கள் அனைவரும் ரணில் விக்ரமசிங்கவின் அரசாங்கத்தில் அமர மாட்டார்கள் என்றும், எந்த அமைச்சுப் பதவியையும் ஏற்க மாட்டார்கள் என்றும் ஏகமனதாகத் தீர்மானித்துள்ளனர். அந்த ஒழுக்கத்தின்படி, மத்திய குழு சந்தித்து ஒழுக்காற்று விசாரணைக்கு முகம் கொடுக்க வேண்டும். முந்தைய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இதேதான் நடக்கிறது.”

COMMENTS

Wordpress (0)
Disqus ( )