‘திலினியுடன் பணப் பரிவர்த்தனைகளில் ஈடுபடவில்லை’

‘திலினியுடன் பணப் பரிவர்த்தனைகளில் ஈடுபடவில்லை’

(UTV | கொழும்பு) – திலினி பிரியமாலியின் பணப் பரிவர்த்தனைகளுக்கு தமக்கோ அல்லது அவரது குடும்பத்தில் உள்ள எவருக்கோ எவ்வித தொடர்பும் இல்லை என பொறுப்புடன் அறிவிக்கிறேன் என ஹம்பாந்தோட்டை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ நேற்று (19) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

இது தொடர்பில் விசேட அறிக்கையொன்றை விடுத்துள்ள அவர்,

சந்தேக நபர் மற்றும் மற்றுமொரு நபரின் விடுதலைக்கு செல்வாக்கு செலுத்தும் வகையில் தொலைபேசி அழைப்பை மேற்கொண்டதாக ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி சபையில் தெரிவித்த குற்றச்சாட்டை வன்மையாக மறுப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இச்சம்பவத்தில் தமக்கு தொடர்பில்லாததால் பொலிஸாரிடம் செல்ல வேண்டிய அவசியமில்லை என நாமல் ராஜபக்ஷ மேலும் தெரிவித்திருந்தார்.

பணமதிப்பு நீக்கம் குறித்து உயர்வாக பேசும் எம்.பி.க்கள் தன்னையோ, தன் குடும்பத்தையோ கொச்சைப்படுத்தாமல், இதுபோன்ற தொழில்களில் முதலீடு செய்த அரசியல்வாதிகளுக்கு எப்படி இவ்வளவு பணம் கிடைத்தது என்பதை கண்டறிய வேண்டும் என்றார்.

இந்த அறிக்கை தொடர்பில் சிறப்புரிமைக் குழுவிடம் முறைப்பாடு செய்யவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

COMMENTS

Wordpress (0)
Disqus ( )