TikTok செயலிக்கு தற்காலிக தடை !
(UTV | அமான்) – ஜோர்தானில் TikTok சமூக ஊடக பயன்பாடு தற்காலிகமாக தடை செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன .
எரிபொருள் விலையேற்றத்திற்கு எதிராக இடம்பெற்ற போராட்டத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கொல்லப்பட்டதை அடுத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, போராட்டக்காரர்கள் வன்முறையை பரப்ப டிக்டாக் செயலியை தவறாக பயன்படுத்துவதாக அந்நாட்டு அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
குறித்த போராட்டமானது இன்றுடன் மூன்றாவது நாளாக தொடர்கின்றமை குறிப்பிடத்தக்கது.
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්