facebook இற்கு 725 மில்லியன் டாலர் அபராதம்

facebook இற்கு 725 மில்லியன் டாலர் அபராதம்

(UTV | கொழும்பு) – உலகம் முழுவது அதிக பயனர்களைக் கொண்ட சமூக வலைத்தளமான பேஸ்புக் ( facebook ) நிறுவனம் 725 மில்லியன் டாலர் தொகையை அபராதமாக செலுத்த ஒப்புக்கொண்டுள்ளது.

அதன் படி பயனர்களின் தகவல்களை தவறாக பயன்படுத்துவதாக பேஸ்புக் நிறுவனம் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்து வந்த நிலையில் 2016-ம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலின்போது அமெரிக்க பேஸ்புக் பயனர்களின் தகவல்களை இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் அனாலிடிகா நிறுவனம் தவறாக பயன்படுத்த அனுமதித்ததாக கோரி பேஸ்புக் மீது அமெரிக்க நீதிமன்றத்தில் கடந்த 2018-ம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு விசாரணை 4 ஆண்டுகளுக்கும் மேலாக நடைப்பெற்று கொண்டிருக்கும் வேளையில் பேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா 725 மில்லியன் டாலர் தொகையை அபராதமாக செலுத்த ஒப்புக்கொண்டுள்ளது.

அதனடிப்படையில் இந்த வழக்கு முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

COMMENTS

Wordpress (0)
Disqus ( )