உள்நாடு

சிறைச்சாலை கைதிகளை பார்வையிட அனுமதி

(UTV | கொழும்பு) –இன்று நாட்டில் உள்ள அனைத்து சிறைச்சாலைகளிலும் உள்ள கிறிஸ்தவ கைதிகளுக்கு மாத்திரம் பார்வையாளர்களை சந்திப்பதற்காக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதன்படி கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு இவ்வாறு கிறிஸ்தவ கைதிகளுக்கு பார்வையாளர்களை சந்திப்பதற்காந வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர், சிறைச்சாலைகள் மேலதிக ஆணையாளர் நாயகம் சந்தன ஏகநாயக்க தெரிவித்துள்ளார்.

அதற்கமைய இவ்வாறு பார்வையிட வருபவர்களுக்கு முறையான சுகாதார மற்றும் பாதுகாப்பு முறைகளை பின்பற்றுவதற்கு ஏற்பாடு செய்யப்படுவதோடு கைதிகளின் உறவினர்கள் கொண்டுவரும் உணவை எடுத்து வருவதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top