மீண்டும் ஒரு நிலநடுக்கம் பதிவு

 மீண்டும் ஒரு நிலநடுக்கம் பதிவு

(UTV | கொழும்பு) –  மீண்டும் ஒரு நிலநடுக்கம் பதிவு

இந்தியாவின் குஜராத் மாநிலம் ராஜ்கோட் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
ராஜ்கோட்டிற்கு வடமேற்கே 270 கி.மீ தூரத்திலும், 10 கி.மீ ஆழத்திலும் நேற்று மதியம் 3.30 மணியளவில் ரிக்டர் அளவுகோலில் 4.3 புள்ளிகளாக பதிவாகியுள்ளதாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மகாராஷ்டிரா, மேகாலயா மாநிலங்களை தொடர்ந்து குஜராத்திலும் நில அதிர்வு உணரப்பட்ட நிலையில் மக்கள் பெரும் பீதியில் உள்ளனர்.

லேசான நில அதிர்வு என்பதால் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

COMMENTS

Wordpress (0)
Disqus ( )