மார்ட்டின் ரேஸர் மற்றும் ஷெஹான் சேமசிங்க ஆகியோருக்கு இடையில் சந்திப்பு

(UTV | கொழும்பு) –  மார்ட்டின் ரேஸர் மற்றும் ஷெஹான் சேமசிங்க ஆகியோருக்கு இடையில் சந்திப்பு

உலக வங்கியின் தெற்காசியாவிற்கான துணைத் தலைவர் திரு. மார்ட்டின் ரேசர், பாதிக்கப்படக்கூடிய குழுக்களைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்ட அனைத்து சீர்திருத்தங்களும் வெற்றிபெற அதிக வெளிப்படைத்தன்மையுடன் செய்யப்பட வேண்டும் என்று கூறினார்.

வாஷிங்டனில் நடைபெறும் சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியின் வசந்த கால சந்திப்புகளுடன் இணைந்து திரு.மார்ட்டின் ரேஸர் மற்றும் நிதி இராஜாங்க அமைச்சர் திரு.ஷெஹான் சேமசிங்க ஆகியோருக்கு இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. அக்கூட்டத்தில் திரு.மார்ட்டின் ரேசர் இவ்வாறு கூறியுள்ளார்.

இந்த சந்திப்பில் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்கவும் பங்கேற்றுள்ளார்.

மேலும், இந்தக் கூட்டத்தில், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் டிஜிட்டல் பொருளாதாரம் மற்றும் ஏற்றுமதி சார்ந்த சிறு மற்றும் நடுத்தர வணிகங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது என்று திரு. மார்ட்டின் ரேசர் கூறினார்.

சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்துவதில் இலங்கை அடைந்துள்ள முன்னேற்றம் குறித்து மகிழ்ச்சியடைவதாகவும், இலங்கையை மீட்பதற்கு உலக வங்கி யோசனைகள் மற்றும் நிதி உதவிகளை வழங்கும் என்றும் திரு மார்ட்டின் ரேசர் சுட்டிக்காட்டியுள்ளார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

COMMENTS

Wordpress (0)
Disqus ( )