சுற்றுலா ராஜாங்க அமைச்சர் டயானா கமகேவினால் முன்னெடுக்கப்பட்ட திட்டம் தோல்வி

சுற்றுலா ராஜாங்க அமைச்சர் டயானா கமகேவினால் முன்னெடுக்கப்பட்ட திட்டம் தோல்வி

(UTV | கொழும்பு) –  சுற்றுலா ராஜாங்க அமைச்சர் டயானா கமகேவினால் முன்னெடுக்கப்பட்ட திட்டம் தோல்வி

டயானா கமகேவினால் முன்னெடுக்கப்பட்ட திட்டம் தோல்வியடைந்துள்ளநிலையில், கொழும்பின் தாமரை கோபுரம், அதன் 44,000 சதுர அடி இரண்டாவது மாடிக்கு முதலீட்டாளர்களைத் தேடுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Kreate Design PTE என்ற சிங்கப்பூர் நிறுவனம் கடந்த ஆண்டு தாமரை கோபுர மேலாண்மை நிறுவனம் (private limited) (LTMC) உடன் கோபுரத் தளத்தின் இரண்டாம் மாடிக்காக ஒப்பந்தம் செய்திருந்தது.

இந்த கையொப்பமிடும் நிகழ்வில் அமைச்சர் டயானா கமகே மற்றும் அரச சுற்றுலாத்துறை அமைச்சரின் ஒருங்கிணைப்புச் செயலாளர் அரோஷ பெர்னாண்டோ ஆகியோர் கலந்துகொண்திருந்தனர்.

எனினும் ஒப்பந்தம் முடிந்து மூன்று மாதங்கள் ஆகியும், தேவையான சூதாட்ட உரிமத்தை நிறுவனம் பாதுகாக்க வேண்டும் என்பது உட்பட நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்படவில்லை.

இந்தநிலையில் கோரிக்கையின் பேரில் ஒரு மாத கால அவகாசம் வழங்கப்பட்டது. அந்த காலப்பகுதியிலும் நிபந்தனை நிறைவேற்றப்படவில்லை. எனவே தற்போது குறித்த தளம் மீண்டும் வாடகைக்கு விடும் நோக்கில் தயார்ப்படுத்தப்பட்டுள்ளதாக தாமரைக் கோபுரத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியும் பணிப்பாளருமான மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க தெரிவித்தார்.

மூன்று வருடங்களில் மொத்தமாக 1 பில்லியன் அமெரிக்க டொலர்கள் உள்ளீட்டில் இலங்கையின் “முதல் வெளிநாட்டு நிதியுதவி கெசினோ மற்றும் பொழுதுபோக்கு மையத்தை” Kreate திறக்கும் என்று அமைச்சர் கமகே முன்னதாக கூறியிருந்தார்.

தாமரை கோபுரத்தின் கணிசமான இடம் ஏற்கனவே உணவு வழங்குபவர்களுக்கும் மற்றவர்களுக்கும் வாடகைக்கு விடப்பட்டுள்ளது. இதுவரை 828,000 க்கும் அதிகமான மக்கள் – அவர்களில் 14,700 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் கோபுரத்தைப் பார்வையிட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

COMMENTS

Wordpress (0)
Disqus ( )