இந்தியா – பங்களாதேஷை சூறையாடிய அம்பன் சூறாவளி

இந்தியா – பங்களாதேஷை சூறையாடிய அம்பன் சூறாவளி

(UTV|கொழும்பு)- அம்பன் சூறாவளியில் சிக்கி இந்தியா மற்றும் பங்களாதேஷில் இதுவரை குறைந்தது 15 பேர் உயிரிழந்துள்ளனர்.

சுமார் 185 கிலோ மீட்டர் வேகத்தில் வீசிய காற்றினால் மேற்குவங்க தலைநகர் கொல்கத்தாவிலும், வங்கதேசத்திலும் பாரிய சேதங்கள் ஏற்பட்டுள்ளன.

இன்னும் 300 மி.மீ வரை மழை பொழியக்கூடும் என்றும் இதனால் வெள்ளம் மற்றும் மண்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் வானிலை ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.

COMMENTS

Wordpress (0)
Disqus ( )