வேண்டுமென்றே இருமினால் சிவப்பு எச்சரிக்கை

வேண்டுமென்றே இருமினால் சிவப்பு எச்சரிக்கை

(UTV|கொழும்பு) – கால்பந்து போட்டியின்போது எதிரணி வீரர்களின் முகம் அருகே அல்லது நடுவர் முகம் அருகே வேண்டுமென்றே இருமினால் தடைவிதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தலுக்கு பின்னர், ஐரோப்பிய நாடுகளில் கால்பந்து போட்டிகள் ரசிகர்கள் இல்லாமல் நடைபெற்று வருகின்றன.

ஒரு வீரரிடம் இருந்து மற்றொரு வீரருக்கு கொரோனா தொற்று பரவாமல் இருக்க பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கப்பட்டுள்ளன.

மைதானங்களில் அடிக்கடி துப்பக்கூடாது. வீரர்கள் சந்தோசத்தில் ஒருவருக்கொருவர் கட்டிப்பிடிக்கக் கூடாது, முடிந்த அளவு சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று வீரர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஒரு வீரர் மற்றொரு வீரர் முகம் அருகே சென்று வேண்டுமென்றே இருமினாலும், நடுவர் முகம் அருகே சென்று வேண்டுமென்றே இருமினாலும் அவரை சிவப்பு அட்டை கொடுத்து வெளியே அனுப்பலாம். அல்லது மஞ்சள் அட்டை கொடுத்து தண்டிக்கலாம் என நடுவருக்கு அதிகாரம் கொடுக்கும் வகையில் இங்கிலாந்து கால்பந்து சங்கம் வழிகாட்டு நெறிமுறையை திருத்தம் செய்துள்ளது.

COMMENTS

Wordpress (0)
Disqus ( )