ரசிகரின் கேள்விக்கு இரட்டை அர்த்தத்தில் பதிலளித்த நடிகை கஸ்தூரி..!

(UDHAYAM, COLOMBO) – சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுத்திருக்கும் மாஜி நடிகை கஸ்தூரி, சமீபகாலமாக தனது டுவிட்டரில் அவ்வப்போது ஏதேனும் கருத்துக்களை வெளியிட்டு பரபரப்பான நடிகையாகியிருக்கிறார்.

அந்த வகையில், ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து தனது டுவிட்டரில் கருத்து வெளியிட்டு ரசிகர்களின் கோபத்துக்கு ஆளானார் கஸ்தூரி.

அதன்பிறகு ரஜினியை மரியாதை நிமித்தமாக சந்தித்து அந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

இந்தநிலையில், தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு எதிராக இந்து மக்கள் கட்சியினர் பொலிசில் புகார் அளித்துள்ளனர்.

அதில், பிக்பாஸ் நிகழ்ச்சி இந்து மத கலாச்சாரத்துக்கு எதிராக உள்ளது.

அதனால் அந்த நிகழ்ச்சியை தடை செய்ய வேண்டும்.

அதை நடத்தும் நடிகர் கமல்ஹாசனையும் கைது செய்ய வேண்டும் என்று புகார் அளித்துள்ளனர்.

இதையடுத்து, கஸ்தூரி தனது டுவிட்டரில், “பிக்பாஸ் போட்டியாளர்கள் ஏற்கனவே 100 நாள் வீட்டு காவலில் தான் உள்ளனர், அவர்களை ஏன் கைது

செய்யவேண்டும்? முதல்ல கலாச்சார தீவிரவாதிகளிடமிருந்து தமிழ் கலாச்சாரத்தை காப்பாத்தனும்.

இந்து மதம் ஒன்னும் யாருடைய தனிப்பட்ட சொத்து அல்ல, வேலி போட்டு காக்க” என்று கூறியுள்ளார்.

இதனை பார்த்த ஒரு ரசிகர் இல்லன்னா மட்டும் சினிமாவில் அவுத்து போட்டு ஆடும் நடிகைகள் காப்பாத்திடுவாங்கலாக்கும! நடிச்சமா நாலு காசு பாத்தம்மான்னு போமா.. என்று கஸ்தூரியிடம் கேள்வி எழுப்பினார்.

இதனையடுத்து, அவருக்கு கஸ்தூரி கொடுத்துள்ள பதிலை கீழே பாருங்கள்.

COMMENTS

Wordpress (0)
Disqus ( )