29 நாட்களுக்கு பின்னர் பிரேதத்தில் கொரோனா POSITIVE

29 நாட்களுக்கு பின்னர் பிரேதத்தில் கொரோனா POSITIVE

(UTV | கொழும்பு) – சுமார் 29 நாட்களுக்கு பின்னர் இறந்த உடலில் இருந்து எடுக்கப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனை அறிக்கை நேர்மறையான வடிவத்தை வழங்கியுள்ளதாக அநுராதபுர போதனா வைத்தியசாலை தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் நாம் வினவியபோது, சம்பவம் உண்மை என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஹரித அழுத்கே உறுதிப்படுத்தியிருந்தார்.

தம்புள்ளை பிரதேசத்தினை வசிப்பிடமாகக் கொண்ட ஒருவரின் இறந்த உடலை குறித்த நபரின் உறவினர்களால் ஏற்றுக் கொள்ள மறுக்கப்பட்ட நிலையில், உடல் அதி குளிரூட்டப்பட்ட பிரேத அறையில் வைக்கப்பட்ட நிலையில், குறித்த உடலானது PCR பரிசோதனைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது.

இதன்போது கருத்துத் தெரிவித்த வைத்தியர்;

“.. PCR இல் தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து அவரது உடலில் வைரஸ் இருந்தது என எம்மால் கூற முடியாது. ஏனெனில் இவர் மரணிக்க முன்னர் கொரோனா தொற்றாளராக இனங்காணப்பட்ட ஒருவர். இந்த நேரத்தில் எங்களுக்கு மற்றொரு தொழில்நுட்ப சிக்கல் உள்ளது, ஏன் இந்த நேரத்தில் அவருக்கு PCR பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது என்று, 29 நாட்களுக்கு பின்னர் இறந்த உடலில் இருந்து பெறப்பட்ட PCR பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக உள்ளது. எனினும், வைரஸ் உடலில் உள்ளது முழுமையாக கூற முடியாது..” எனத் தெரிவித்திருந்தார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

COMMENTS

Wordpress (0)
Disqus ( )