ரஞ்சனுக்கு மன்னிப்புகள் இல்லை : தொடர்ந்தும் சிறைக்கம்பிகள் இடையே..

ரஞ்சனுக்கு மன்னிப்புகள் இல்லை : தொடர்ந்தும் சிறைக்கம்பிகள் இடையே..

(UTV | கொழும்பு) – பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் ராமநாயக்கவுக்கு வழங்கப்பட்டுள்ள கடூழிய சிறைத்தண்டனை தொடர்பில் மீள் பரிசீலனை செய்யுமாறு உயர் நீதிமன்றில் முன்வைத்திருந்த பிரேரணை நிராகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பாராளுமன்ற உறுப்பினரின் சட்டத்தரணிகளால் குறித்த மனு முன்வைக்கப்பட்டிருந்தது.

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் குற்றவாளியாக பெயரிடப்பட்டுள்ள ரஞ்சன் ராமநாயக்கவுக்கு நான்கு வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

COMMENTS

Wordpress (0)
Disqus ( )