லெபனானில் உள்ள இலங்கையர்களுக்கான அறிவித்தல்

லெபனானில் உள்ள இலங்கையர்களுக்கான அறிவித்தல்

(UTVNEWS | COLOMBO) -லெபனானில் சட்டவிரோதமாக தங்கியுள்ள இலங்கையர்களுக்கு அந்நாட்டு அரசாங்கம் நிபந்தனைகளுடன் கூடிய பொது மன்னிப்பினை வழங்கியுள்ளது.

லெபனானில் பணிபுரிவதற்குரிய ஆவணங்களின்றி பணிபுரியும் இலங்கையர்கள் மீண்டும் தாயம் திரும்புவதற்காக இந்த பொது மன்னிப்பு காலம் வழங்கப்பட்டுள்ளது.

கடந்த மார்ச் மாதம் 15 ஆம் திகதி முதல் எதிர்வரும் 12 ஆம் திகதி வரையில் லெபனான் முழுமையாக மூடப்பட்டுள்ளமையினால், அந்நாட்டில் தொழில் புரியும் அனைத்து இலங்கையர்கள் தொடர்பிலான தகவல்களை இலங்கை தூதுவராலயத்தின் முகவரிக்கு அல்லது வட்ஸ்ஏப் இலக்கத்திற்கு அனுப்ப நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் வெளிவிவகார அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது.

COMMENTS

Wordpress (0)
Disqus ( )